திருநெல்வேலி மாவட்ட விவசாயிகள் தங்களை பற்றிய தகவல்களை கிரெய்ன்ஸ் தளத்தில் பதிவு செய்து பயன்பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், மத்திய அரசின் வேளாண்மை அடுக்குத்திட்டம் அனைத்து மாநிலங்களிலும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் நில விவரங்களுடன் விவசாயிகளின் விவரங்கள் மற்றும் நில உடைமை வாரியாக பயிர் சாகுபடி விபரங்களை இணைப்பதற்காக கிரன்ஸ் GRIANS (உற்பத்தியாளர் வலைதள பதிவு வழி வேளாண் இடுபொருள் முறை) என்ற புதிய வலைதளம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த வலைதளத்தில் விவசாயிகள் பயனடையும் வகையில் விவசாயம் தொடர்புடைய 13 துறைகள் இணைக்கப்பட்டுள்ளன. இந்த ஒற்றை சாரள முறையில் பதிவு செய்வதன் மூலம் விவசாயிகள் அனைத்து துறை பயணங்களையும் ஒரே தளத்தில் பெற முடியும். தனித்தனியாக சம்பந்தப்பட்ட துறைக்கு ஆவணங்கள் சமர்ப்பிக்க தேவையில்லை. நிதி திட்ட பயன்கள் விவசாயிகளின் ஆதார் எண் அடிப்படையில் அவர்களது வங்கி கணக்கிற்கு நேரடியாக பணப்பரிமாற்றம் செய்யப்படும்.

உங்கள் நகரத்திலிருந்து(திருநெல்வேலி)

திருநெல்வேலி

திருநெல்வேலி

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இந்த நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகளின் ஆதார் அட்டை, புகைப்படம், வங்கி கணக்கு புத்தகங்கள், நிலப்பட்டா நகல் ஆகிய ஆவணங்களுடன் தங்கள் பகுதி கிராம நிர்வாக அலுவலர் உதவி வேளாண்மை அலுவலர் தோட்டக்கலை அலுவலர்கள் யாரேனும் ஒருவரை தொடர்பு கொண்டு தங்களின் ஆவணங்களை கொடுத்து கிரெய்ன்ஸ் திட்டத்தில் பதிவு செய்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:



Source link