மும்பை: மும்பை பங்குச்சந்தையில் இன்று (புதன்கிழமை) வர்த்தகம் ஏற்ற இறக்கமின்றி தட்டையாகத் தொடங்கியது. வர்த்தக துவக்கத்தின்போது சென்செக்ஸ் 5 புள்ளிகள் சரிவடைந்து 60,152 ஆக இருந்தது. இதேபோல், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 9 புள்ளிகள் உயர்ந்து 17,732 ஆக இருந்தது.
கடந்த சில நாட்களாக தொடர்ந்து லாபத்தில் நிறைவடைந்த பங்குச்சந்தைகளில் புதன்கிழமை வர்த்தகம் லாபநஷ்டமின்றித் தொடங்கியது. காலை 10:21 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 54.33 புள்ளிகள் உயர்வடைந்து 60,212.05 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 27.60 புள்ளிகள் உயர்வடைந்து 17,749.90 ஆக இருந்தது.
உலகளாவிய சந்தைகளின் கலவையான சூழல் காரணமாகவும், பணவீக்கம், இன்று வெளியாகும் மார்ச் காலாண்டு வருவாய் தரவுகளை எதிர்பார்த்து முதலீட்டாளர்கள் காத்திருப்பதால் இந்திய பங்குச்சந்தைகள் இன்று லாப நஷ்டமின்றி பயணித்தது.
தனிப்பட்ட பங்குகளைப் பொருத்தவரை ஹெச்டிஎஃப்சி பேங்க், டெக் மகேந்திரா, ஹெச்டிஎஃப்சி, டாடா மோட்டார்ஸ், ஈசியன் பெயின்ட்ஸ், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், ஐசிஐசிஐ பேங்க், விப்ரோ, இன்போசிஸ், ஆல்ட்ரா டெக் சிமெண்ட்ஸ், டாடா ஸ்டீல், சன்பார்மா இன்டஸ்ட்ரீஸ், டிசிஎஸ் பங்குகள் ஏற்றத்தில் இருந்தன. பவர் கிரிடு கார்ப்பரேஷன், இன்டஸ்இன்ட் பேங்க், பாரதி ஏர்டெல், என்டிபிசி, நெஸ்ட்லே இந்தியா, ஹிந்துஸ்தான் யுனிலீவர் பஜாஜ் ஃபைனான்ஸ், ஐடிசி, கோடாக் மகேந்திரா பேங்க், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, பஜாஜ் ஃபின்சர்வ், எல் அண்ட் டி, ஹெச்சிஎல் டெக்னாலஜி, டைவில் கம்பெனி பங்குகள்.