வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: பா.ஜ.,வில் இணைந்த ராஜாஜியின் கொள்ளுப் பேரன் கேசவன், பிரதமர் மோடியை சந்தித்தார்.
நம் நாட்டின் கடைசி கவர்னர் ஜெனரலாகவும், மத்திய உள்துறை அமைச்சராகவும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவராகவும் திகழ்ந்தவர் ராஜாஜி.
இவரது கொள்ளுப் பேரன் கேசவன். இவர், தமிழக காங்கிரஸில் முக்கிய தலைவர்களில் ஒருவராக வந்தார்.கடந்த வாரம் புதுடில்லி சென்று மத்திய அமைச்சர் வி.கே.சிங் முன்னிலையில் பா.ஜ.,வில் இணைந்தார்.இந்நிலையில் பிரதமர் மோடியை அவரது அலுவலக இல்லத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.
விளம்பரம்