Doctor Vikatan: பூரான் கடித்தால் விஷமா…. இதற்கு சிகிச்சை அவசியமா?
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பொதுமருத்துவர் பாபு நாராயணன்.

பூரான் கடிக்கும்போது அதில் சிறிதளவு விஷத்தன்மை இருக்கவே செய்யும். ஆனால் அது மனிதர்களைக் கடிக்கும்போது பெரிய விளைவுகளை ஏற்படுத்துவது இல்லை. பூரான் கடித்துவிட்டால், அந்த இடம் சிவந்துபோவது, எரிச்சல், வலி, வீக்கம் போன்றவை ஏற்படும்.
அரிதாகச் சிலருக்கு அந்தப் பூரானின் விஷக்கடியால் உடலளவில் (முறைமை வெளிப்பாடு) சில பாதிப்புகள். அவை இதயம் சம்பந்தப்பட்டதாகவோ, நரம்பு மண்டலம் சம்பந்தப்பட்டதாகவோ, தசைகள் சம்பந்தப்பட்டதாகவோ இருக்க வாய்ப்புகள் உண்டு. நெஞ்சு படபடப்பு, மயக்கம், பதற்றம் போன்ற அறிகுறிகள் சிலருக்கு.