சென்னையை அடுத்த கிளாம்பாக்கத்தில் கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிலையம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் என்ற பெயரில் ஜூன் மாதம் திறக்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் பெருநகர சென்னை வளர்ச்சி குழுமத்தின் புதிய அறிவிப்புகளை அமைச்சர் சேகர்பாபு அறிவித்தார். அதில் கிளாம்பாக்கத்தில் 88.52 ஏக்கர் நிலத்தில் 393 கோடியே 74 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன் வரும் புதிய பேருந்து முனையம் ஜூன் மாதத்தில் ‘கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம்’ எனும் பெயரில் மக்கள் பயன்பாட்டிற்கு முதலமைச்சர் அவர்களால் தொடங்கப்படும் என அறிவித்தார்.
உங்கள் நகரத்திலிருந்து(சென்னை)
கிளாம்பாக்கத்தில் அமைக்கப்பட்டு வரும் பேருந்து முனையத்திலிருந்து ஒப்பந்த பேருந்துகள் இயக்குவதற்கு வசதியாக வெளிவட்ட சாலையை ஒட்டி வரதராஜபுரத்தில் ஒப்பந்த பேருந்து நிறுத்துமிடம் 29 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும் எனவும் அறிவித்தார். மேலும் கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் 6 ஏக்கரில் 8 கோடி மதிப்பீட்டில் பூங்கா அமைக்கப்படும் என அறிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV: