தென்காசி மாவட்டம் சங்கரன் கோயிலில் சமரச தீர்வு தினத்தை முன்னிட்டு பேரணி நடைபெற்றது. இதில் நீதிபதிகள், மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர். தமிழ்நாடு மாநில சமரச தீர்வு மையத்தின் அறிவுறுத்தலின்படி, திருநெல்வேலி மாவட்ட சமரச தீர்வு மையம் மற்றும் திருநெல்வேலி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் தேசிய சமரச தீர்வு மைய தினத்தை முன்னிட்டு சங்கரன்கோவில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திலிருந்து பழைய பஸ் ஸ்டாண்ட் வரை விழிப்புணர்வு பேரணி நடந்தது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
இந்த பேரணியை சார்பு நீதிமன்ற நீதிபதி சந்திரசேகர், கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி நரசிம்ம மூர்த்தி ஆகியோர் துவக்கி வைத்தனர். மேலும் இந்த பேரணியில் சங்கரன்கோவில் அரசு கலைக்கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்றனர். விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டது. இந்த பேரணியில் சங்கரன்கோவில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ, மாணவிகள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
உங்கள் நகரத்திலிருந்து(தென்காசி)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.