விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் புத்தக கண்காட்சி நடைபெற்று வருகிறது. காந்தி கலை மன்றத்தில் நடைபெற்று வரும் இப்புத்தக கண்காட்சியை பொதுமக்கள் பலர் வந்து பார்வையிட்டு புத்தகங்களை வாங்கி செல்கின்றனர்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் புத்தகக் கண்காட்சி நடைபெற்று வரும் நிலையில், இந்த ஆண்டு புத்தக கண்காட்சி ராஜபாளையத்தில் உள்ள காந்தி கலை மன்றத்தில் விகடன் பிரசுரம் மற்றும் மதுரை மீனாட்சி புக் ஷாப் சார்பில் கடந்த 8ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.
இப்புத்தக கண்காட்சியில் அறிவியல், ஆன்மிகம், வரலாறு என பல்வேறு பிரிவுகளில் பல புத்தகங்கள் பார்வைக்காக அடுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையம், இந்தாண்டு பொன்னியின் செல்வன், வேள்பாரி போன்ற புத்தகங்களுக்கு நல்ல வரவேற்பு இருப்பதாக கூறப்படுகிறது.
உங்கள் நகரத்திலிருந்து(விருதுநகர்)
இதையும் படிங்க :புதுவையில் ‘லால் சலாம்’ ஷூட்டிங்.. பார்வையிட வந்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த்!
10 சதவீதம் தள்ளுபடி:
மேலும் வாங்கும் ஒவ்வொரு புத்தகத்திற்கும் 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும், இது பற்றி பேசிய மதுரை மீனாட்சி புக் ஷாப் உரிமையாளர் அருணாசலம், ராஜபாளையம் பகுதியில் ஆண்டுதோறும் புத்தக கண்காட்சி நடத்துவதாகவும், இந்த முறை 22வது முறையாக புத்தக கண்காட்சி நடத்துவதாகவும் தெரிவித்தார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
நாளுக்கு நாள் புத்தக வாசிப்பு குறைந்து வந்த நிலையில் தற்போது இந்த முறை கொஞ்சம் புத்தக விற்பனை அதிகரித்துள்ளது என்று கூறியவர் இப்புத்தக கண்காட்சி வருகின்ற ஏப்ரல் 18 ஆம் தேதி வரை நடைபெறும் என்று அவர் தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV: