தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் உள்ள தென் திருவண்ணாமலை என போற்றப்படும் அருள்மிகு பரமசிவன் மலைக்கோயில் சித்திரை திருவிழாவின் கொடியேற்ற நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பரமசிவன் கோவில் :-

தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் இருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவில் பரமசிவன் மலைக்கோவில் அமைந்துள்ளது. தென் திருவண்ணாமலை என போற்றப்படும் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவிலானது முன்பு போடிநாயக்கனூரை ஆண்ட ஜமீன்களால் உருவாக்கப்பட்டு தற்போது இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இக்கோயில் திருவிழாவானது ஆண்டுதோறும் சித்திரை மாதம் இரண்டாம் நாள் தொடங்கி எட்டு நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும்.

உங்கள் நகரத்திலிருந்து(தேனி)

அதன்படி, இந்த ஆண்டு பாரம்பரிய முறைப்படி ஜமீன்தார் வம்சாவளியான வடமலை முத்து சீலராஜா பாண்டியர் தலைமையில் பழமை வாய்ந்த பெரியாண்டவர் திருக்கோயிலில் கொடிமரம் வைத்து சிறப்பு பூஜைகள் செய்து போடி நகர முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு மலை உச்சியில் அமைந்துள்ள கோயிலுக்கு முன்பாக கொடியேற்றம் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் போடிநாயக்கனூர் மற்றும் சுற்றுப்பகுதியில் சேர்ந்த விவசாயிகள் வியாபாரிகள் பொதுமக்கள் என திரளானோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கோயில் செயல் அலுவலர் மாரிமுத்து உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:



Source link