விழுப்புரத்தில் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் மூலம் பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. அது ஒரு போதும் ”பிளாஸ்டிக் வேண்டாம் மஞ்சள் பை” என்ற கருத்தை மக்களிடம் நாடக கலைஞர்கள் மூலமாக கொண்டு சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டம் புதிய பேருந்து நிலையம், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் மூலம், பிளாஸ்டிக் இல்லா தமிழகத்தை உருவாக்கும் நோக்கில் நாடக கலைஞர்களை கொண்டு பாட்டு பாடும், பிளாஸ்டிக்கை தவிர்த்து மஞ்சள் பைகளை பயன்படுத்துங்கள் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

பிளாஸ்டிக் பைகள் கொண்டு அரக்கன் மற்றும் சூரன் போன்ற வேடங்கள் அணிந்து நாடக கலைஞர் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள்.

உங்கள் நகரத்திலிருந்து(விழுப்புரம்)

விழுப்புரம்

விழுப்புரம்

தமிழ்நாட்டை பிளாஸ்டிக் மாசில்லா மாநிலமாக உருவாக்க தமிழக அரசு ஒரு முறை தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

நமது சுற்றுச்சூழலை காப்பது நம் கடமை என்ற உணர்வோடு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்து மாற்றுப் பொருட்களை பயன்படுத்துமாறு தமிழக அரசு மக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

மேலும் பொது மக்களுக்கு பிளாஸ்டிக் தவிர்த்து மஞ்சள் பை பயன்படுத்துங்கள் என்ற விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:



Source link