ஆட்டிசம் என்பது மூளை தகவல்களைப் புரிந்துகொள்ளும் திறனை தடுப்பதே ஆகும். பார்த்தல், கேட்டல் மற்றும் உணரும் விஷயங்களை சரியாக புரிந்து கொண்டு பயன்படுத்த முடியாமல் இருப்பது தான் ஆட்டிசம் ஆகும். இது ஒரு நோய் அல்ல ஒரு குறைபாடு மட்டுமே. முறையான பயிற்சிகள் இருந்தால் ஆட்டிசம் பாதித்த மாணவர்களும் எளிதில் சிகரம் தொடலாம் என்பதற்கு கிஷோர் குமாரின் வாழ்க்கை ஒரு உதாரணம்.
புதுக்கோட்டை மாவட்டம் வடக்கு ராஜவீதியில் உள்ள அரசு பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வரும் மாணவர் தான் கிஷோர் குமார்.இந்த மாணவர் மூன்றரை வயதில் ஆட்டிசம் மற்றும் ஏ டி ஹெச் டி யால் பாதிக்கப்பட்டு தற்போது அதற்கான தெரபி சிகிச்சை பெற்று வருகிறார். ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டவர்கள் பொதுவாக எதையுமே வரவில்லை என விட்டு விட மாட்டார்கள். அவர்களுக்கு பிடித்த ஒரு விஷயத்தை மீண்டும் மீண்டும் முயன்று அதில் பெரிய அளவில் சாதனை புரிவார்கள். அப்படித்தான் மாணவன் கிஷோர் குமாரும், அவருக்கு கணித பாடத்தில் அதீத ஆர்வம் உண்டு. ஒரு வருடத்தின் தேதியை சொல்லும் போது அந்த தேதியின் கிழமை என்பதை மிகச்சரியாக சில நொடிகளில் தெரிவிக்கிறார். கணிதத்தில் எத்தனை இலக்க எண்களைக் கொடுத்தாலும் அதை நேரடியாகப் பெருக்கல் முறை செய்து விடை அளித்தல் போன்ற அசரடிக்கும் வகையில் கணிதத்தில் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகிறார்.
இது குறித்து கிஷோர் குமாரின் தாய் காயத்ரி பேசும்போது, ”இந்த குறைபாடு இருப்பதை மூன்றரை வயதில் நாங்கள் கண்டறிந்தோம். அதற்கான சிகிச்சைகளையும் தற்போது அளித்து வருகிறோம். பொதுவாகவே கணிதத்தில் அதிக ஆர்வத்துடன் செயல்பட்ட வருவான் . ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட போதிலும் நண்பர்களுடன் பழகுவது படிப்பில் சற்று கவனத்துடன் இயல்பாக இருப்பான். இந்த குறைபாடு இருக்கும் சிறப்பு பள்ளிக்கூடத்தில் சேர்க்க வேண்டாம்,எல்லா குழந்தைகள் போலவும் சாதாரணமாக பள்ளிக்கூடத்திலேயே அவர் கல்வி கற்கலாம் என்று மருத்துவர் தெரிவித்தார். எனவே புதுக்கோட்டை மாவட்டத்தில் வடக்கு ராஜ வீதியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் படிக்க வைக்கிறோம்” என்று தெரிவித்தார்.
உங்கள் நகரத்திலிருந்து(புதுக்கோட்டை)
மாணவரின் பள்ளி நேர செயல்பாடுகள் குறித்து ஆசிரியர்களிடம் கேட்டபோது, ”மிகச்சிறந்த அறிவாற்றலுடன் இந்த மாணவன் செயல்படுவதாகவும் வகுப்பில் பாடங்கள் நடத்துவதை கவனிப்பதும் மேலும் சக நண்பர்களுடன் பழகுவதும் விளையாடுவது என இயல்பாகவே கிஷோர் குமார் இருப்பார்” என தெரிவிக்கின்றனர். இவரின் பெற்றோர் கிஷோரின் கணித அறிவை மேலும் வளர்த்தால் இந்தியாவில் மீண்டும் ஒரு இராமானுஜர் உருவாவார் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV: