விருதுநகர் மாவட்ட விவசாயிகளுக்கான குறைதீர் கூட்டம் தொடர்பான முக்கிய அறிவிப்பை விருதுநகர் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “விருதுநகர் மாவட்டத்தில் மாதம்தோறும் விவசாயிகளுக்கான குறைதீர் கூட்டம் வருவாய் கோட்டம் வாரியாக கோட்டாட்சியர் தலைமையில் நடைபெறுவது வழக்கம். இதில் விவசாயிகள் நேரடியாக வந்து தங்களின் குறைகளை மனு மூலம் கோரிக்கையாக தெரிவிப்பர்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
உங்கள் நகரத்திலிருந்து(விருதுநகர்)
அந்த வகையில் இந்த முறை சிவகாசி, அருப்புக்கோட்டை மற்றும் சாத்தூர் பகுதிகளில் வரும் 18ம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்சொன்ன பகுதியை சேர்ந்த விவசாயிகள் அந்த பகுதியில் உள்ள வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் குறைதீர் கூட்டத்தில் விவசாயிகளின் கோரிக்கைகளை மனுவாக தெரிவிக்கலாம்” என்று தெரிவித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV: