விழுப்புரம் மலர் சந்தையில் தமிழ் புத்தாண்டையொட்டி அதன் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் சித்திரை மாதம் 1ம் தேதி தமிழ் புத்தாண்டு வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். இதையொட்டி பூக்களின் விலை உயர்ந்துள்ளது. கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் இருப்பதால் விலை உயர்ந்துள்ளது என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். கனகாம்பரம், குண்டுமல்லி , முல்லை முதலிய பூக்களின் விலை உயர்ந்துள்ளதால் விழுப்புரம் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் தமிழ் புத்தாண்டை பொதுமக்கள் கோலாகலமாக வரவேற்று கொண்டாடி வருகின்றனர். கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
உங்கள் நகரத்திலிருந்து(விழுப்புரம்)
இதையும் படிங்க : புதுவையில் ‘லால் சலாம்’ ஷூட்டிங்.. பார்வையிட வந்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த்!
மல்லி கிலோ ரூ.500
கோவில்களில் சிறப்பு பூஜை அலங்காரங்கள் இருப்பதால், குண்டு மல்லி ஒரு கிலோ ரூ.500க்கும், முல்லை அரும்பு கிலோ ரூ.500க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதே போல் ஒரு கிலோ கனகாம்பரம் 800 ரூபாய்க்கும், அரளி ரூ.400க்கும், பன்னீர் ரோஜா ரூ.250க்கும், சாமந்தி பூ ரூ. 350 க்கும்,கோழிக்கொண்டை 50 ரூபாய்க்கும், சம்பங்கி ரூ. 200க்கும், கேந்தி சாமந்தி 60க்கும், பன்னீர் ரோஜா 240க்கும், தாமரை ஒரு மலர் 15 ரூபாய்க்கும், மரிக்கொழுந்து ஒரு வண்டல் 110க்கும், பட்டன் ரோஜாக்கள் கிலோ 200க்கும் விற்பனையானது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
தமிழ் புத்தாண்டையொட்டி கோவில்களில் காலை முதல் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவதால் பூக்களின் விலை அதிகரித்துள்ளது என மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர் வியாபாரிகள். அதே சமயம் பூக்களின் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்துள்ளதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV: