வேலூரில் சிறார் குற்றவாளிகள் 6 பேர் பாதுகாப்பு இல்லத்தில் இருந்து தப்பிய நிலையில், காவல் துறையினர் துரிதமாக செயல்பட்டனர்.
வேலூர் மாவட்டம், காகிதப்பட்டறையில் சமூக நலத்துறை மூலம் நடத்தப்படும் இளம் குற்றவாளிகளுக்கான பாதுகாப்பு இல்லம் உள்ளது. இந்த இல்லத்தில் இருந்து நேற்றிரவு 6 பேர் தப்பிச் செல்ல முயன்றனர். சிறுவர்கள் வெளியேறியதை அடுத்து வடக்கு காவல்துறையினர் துரிதமாக அவர்களைத் தேடினர்.
குறிப்பிட்ட அரசு இல்லத்தின் அருகே உள்ள மாடியில் அவர்கள் ஏறி அட்டகாசம் செய்ததை போலீசார் கண்டறிந்தனர். ஆனால், தங்களை நெருங்க முடியாதபடி போலீசார் மீது அவர்கள் தீப்பந்தங்களை வீசினர்.
உங்கள் நகரத்திலிருந்து(வேலூர்)
இதையும் படியுங்கள்: தமிழ் புத்தாண்டு…கோவில்களில் சிறப்பு வழிபாடு…
தகவலறிந்த மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியன், காவல்துறையினர் மற்றும் வருவாய்த் துறையினர் இணைந்து பேச்சு வார்த்தை நடத்தி குற்றவாளிகளை கீழே வரவழைத்தார்.இந்த இல்லத்தில் கடந்த மாதம் 6 பேர் தப்பிச் சென்றது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV: