நாளை தமிழ் புத்தாண்டு மற்றும் சனி, ஞாயிறு வார விடுமுறை என அடுத்தடுத்து மூன்று நாட்கள் விடுமுறை வருகிறது. இதனால் ஏராளமான மக்கள் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து சொந்த ஊருக்கு சென்ற வண்ணம் உள்ளனர்.
இதன் காரணமாக அரசுப் பேருந்து நிலையம், ஆம்னி பேருந்து நிலையங்களில் பொதுமக்களின் கூட்டம் அதிகளவில் காணப்படுகிறது. தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து 500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
உங்கள் நகரத்திலிருந்து(சென்னை)
வழக்கமாக இயக்கப்படும் 2000 பேருந்துகளுடன் கூடுதலாக 500 பேருந்துகளை போக்குவரத்து துறை இயக்கியுள்ளதால் பயணம் செய்யும் நிலை உருவாகியுள்ளது. இதே போல விடுமுறை முடிந்து சொந்த ஊரில் இருந்து சென்னை திரும்பும் பயணிகளின் வருகைக்கு ஏற்ப சிறப்பு பேருந்துகளை இயக்கும் போக்குவரத்து துறை முடிவு செய்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV: