காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வேடல் கிராமத்தில் காவலர்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும் மேல்நிலை நீர்தேக்க தொட்டி இயக்குபவர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வேடல் கிராமத்தில் உள்ள சமுதாய கூடத்தில், தூய்மை பாரதம் இயக்கம் சார்பில் தூய்மை பணியாளர்கள், தூய்மை காவலர்கள், மேல்நிலை நீர்தேக்க தொட்டி இயக்குபவர்கள், 100 நாள் வேலை செய்யும் பெண்களுக்கென சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
இந்த முகாமில் சிறப்பு விருந்தினராக காஞ்சிபுரம் ஒன்றிய குழு தலைவர் மலர்கொடி குமார் கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
உங்கள் நகரத்திலிருந்து(காஞ்சிபுரம்)
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
இதில் தூய்மை காவலர்கள், தூய்மை பணியாளர்கள், மேல்நிலை நீர்தேக்க தொட்டி இயக்குபவர்கள் மற்றும் 100 நாட்கள் வேலை செய்யும் பெண்கள் என 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்று கண் பரிசோதனை, பல் மருத்துவ பரிசோதனை, தோல் நோய் மருத்துவம், இரத்த அழுத்தம், சர்க்கரை நோய் உள்ளிட்ட மருத்துவ பரிசோதனைகள் செய்து, மருத்துவ நிபுணரிடம் ஆலோசனை பெற்று பயனடைந்தனர்.
இந்நிகழ்வில் ஒன்றிய குழு துணை தலைவர் திவ்யபிரியா இளமது, வட்டார மருத்துவ அலுவலர் அருள்மொழி, ஊராட்சி மன்ற தலைவர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV: