கரூரில் கழிவு நீர் வடிகால் கால்வாய் குழியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்ட கணவன், மனைவி மீது ஒப்பந்ததாரர் கலவையை கொட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாநகராட்சி ஜெஜெ நகர் குடியிருப்புப் பகுதியில் பாதாள சாக்கடை கட்டுமானப் பணிகள் கடந்த 10 நாட்களாக நடைபெற்று வருகிறது. அந்த தெருவில் கோமதி என்பவரின் வீட்டை ஒட்டி சாக்கடை கட்ட பள்ளம் தோண்டிய போது அந்த வீட்டின் பக்கவாட்டுச் சுவரில் விரிசல் ஏற்பட்டது. அதனை கலவை வைத்து சரிசெய்து தருமாறு கேட்டுள்ளனர்.

அதற்கு அந்த ஒப்பந்ததாரர் 43 ஆயிரம் ரூபாய் பணம் கேட்டுள்ளார். இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதை தொடர்ந்து அங்கு மாமன்ற உறுப்பினர் பூபதி மற்றும் மாநகராட்சி பொறியாளர் ரவி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி ஒப்பந்ததாரரை அந்த வீடு மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களில் பணிகள் முடிக்கப்பட்டது.

உங்கள் நகரத்திலிருந்து(கரூர்)

இந்த நிலையில் இன்று அமைக்கும் பணி மீண்டும் நடைபெற்று வந்தது. பாதிக்கப்பட்டவர் வீட்டின் முன்பு பணம் கொடுக்காமல் காங்கிரிட் போட முடியாது என்று ஒப்பந்ததாரர் கூறிய வீட்டின் உரிமையாளர்களான பாலச்சந்தர் மற்றும் கோமதி தம்பதிகள் இருவரும் கழிவுநீர் வடிகால் குடியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த ஒப்பந்ததாரர் அவர்கள் மீது கான்கிரீட் கலவையை கொட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

செய்தியாளர்: தி.கார்த்திகேயன், கரூர்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:



Source link