ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் அருகே சனவேலி கோட்டக்கரை ஆற்றில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தலைமுறை தலைமுறையாக மாட்டு வண்டியில் மணல் அள்ளி வாழ்வாதாரம் பெறப்பட்டது. இந்நிலையில், அங்கு மணல் அள்ள மாவட்ட நிர்வாகம் தடை விதித்த பிறகு அங்கு மணல் அள்ளுவது கிடையாது. ஆனால் தற்போது அங்கு மணல் அள்ளுவதற்கு லாரி, டிராக்டர் போன்ற வாகனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு, மாட்டு வண்டிக்கு மட்டும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடமும், வட்டாட்சியரிடம் பலமுறை மனுக்கள் கொடுத்தும் பயனில்லை என கூறப்படுகிறது. இதனை கண்டித்து மாட்டுவண்டி தொழிலாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் காவல்துறையினருக்கும் மணல் அள்ளும் தொழிலாளர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

மாட்டுவண்டி தொழிலாளர்கள் போராட்டம்

உங்கள் நகரத்திலிருந்து(ராமநாதபுரம்)

ராமநாதபுரம்

ராமநாதபுரம்

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

அவர்களை சமரசம் செய்த மாவட்ட ஆட்சியரகஊழிகளை அவர்களை அழைத்து சென்றனர். பின்னர் மணல் அள்ளும் தொழிலாளர்கள் மாட்டு வண்டியில் மணல் அள்ள அனுமதிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:



Source link