விளாம்பட்டி பகுதியில் பிரவீன்ராஜா என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை வருகிறது. 40க்கும் மேற்பட்ட அறைகள் உள்ளன. நூற்றுக்கும் அதிகமான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். காலையில் வழக்கம்போல தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்ட போது, ​​பட்டாசுக்கு மருந்து செலுத்தும் போது உராய்வு ஏற்பட்டு வெடி விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்து, அறை முழுவதும் வெடித்து தரைமட்டமானது. இதனை கண்டு தொழிலாளர்கள் அனைவரும் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.

இதையும் படிங்க: நாடாளுமன்ற தேர்தல் வியூகம் : திமுக சட்டப்பேரவை தொகுதி பார்வையாளர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

உங்கள் நகரத்திலிருந்து(விருதுநகர்)

விருதுநகர்

விருதுநகர்

தகவலறிந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த விபத்தில், பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் கருப்பசாமி, தங்கவேல் ஆகியோர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.

கட்டட இடிபாடுகளில் சிக்கி காயமடைந்த கருப்பம்மாள் என்பவர் மீட்கப்பட்டு சிவகாசி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக, மாரனேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:



Source link