தமிழ் புத்தாண்டு… நெல்லையில் உள்ள கோவில்களில் சிறப்பு வழிபாடு!

தமிழ் புத்தாண்டையொட்டி திருநெல்வேலியில் உள்ள பல்வேறு கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

தமிழ் நாட்டில் சித்திரை ஒன்றாம் தேதி தமிழ் புத்தாண்டாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள அரசரடி விநாயகர் கோயிலில், மூலவர் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார்.

உங்கள் நகரத்திலிருந்து(திருநெல்வேலி)

திருநெல்வேலி

திருநெல்வேலி

முன்னதாக விநாயகருக்கு சந்தனம் பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் ஆராதனை நடைபெற்றது. இதில் ஏராளமானோர் வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இதேபோல், நெல்லையில் உள்ள முருகன் கோவில், ராமசுவாமி கோவில் மூலவருக்கு சிறப்பு அலங்காரம் ஆராதனை நடைபெற்றது. ராமசுவாமி கோவிலுக்கு அருகே உள்ள இடங்களில் பூஜை பொருட்களை பக்தர்கள் வாங்கி கடவுளுக்கு படைத்து வழிபட்டனர்.

தமிழ் புத்தாண்டு என்பதால் பக்தர்கள் கோவில்களில் தங்கள் குடும்பத்தினருக்கு சிறப்பு அர்ச்சனை செய்தனர். திருநெல்வேலியில் காலை முதலே பல்வேறு கோவில்களில் கூட்டம் அதிகமாக இருந்தது. கூட்ட நெரிசலை தவிர்க்க, போலீசார், கோவில் நிர்வாகம் சார்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் நடந்தன.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:



Source link