இதுமட்டுமல்லாமல், பயனர்கள் தங்களது கருத்துகளுக்கு முக்கியத்துவம் அளிக்க Bold மற்றும் Italics போன்றவற்றையும் பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ட்விட்டர்

ட்விட்டர்

“ட்விட்டரில் எழுதுதல் மற்றும் வாசிப்பு அனுபவத்தை மேம்படுத்துகிறோம். இன்று முதல் தடித்த மற்றும் சாய்வு வடிவத்துடன் 10,000 எழுத்துக்கள் நீளமுள்ள ட்வீட்களை ட்விட்டரில் பதிவு செய்யலாம்” என ட்விட்டரின் சமூக வலைதள பக்கத்தில் வெள்ளிக்கிழமையன்று பதிவிடப்பட்டுள்ளது.

பிப்ரவரி மாதத்தில் ப்ளூ டிக் பயனர்கள் 4,000 எழுத்துகள் வரை பயன்படுத்தலாம் என ட்விட்டர் அறிவித்தது.

ட்விட்டர் அறிமுகப்படுத்தப்பட்டபோது 140 எழுத்துகள் மட்டுமே உபயோகப்படுத்தும் வகையில் இருந்தது. அதன் பிறகு, இந்த எண்ணிக்கை 280-ஆக உயர்த்தப்பட்டது. தற்போது ப்ளூ டிக் பயனர்கள் 10,000 எழுத்துகள் வரை பயன்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

10,000 எழுத்துகள் வரை யார் டைப் செய்யப்போகிறார்கள், `அதுல ஒண்ணுமில்ல, கீழ போட்ரு’ என்பது போல்தான் இருக்கிறது இந்த புதிய அம்சம் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.



Source link