காஞ்சிபுரம் பேரறிஞர் அண்ணா புற்றுநோய் மருத்துவமனையில் 30 வயதுக்கு மேற்பட்ட பெண்களை அதிகம் பாதிக்கும் கர்ப்பப்பை மற்றும் மார்பகப் புற்றுநோய் கண்டறியும் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
உலகம் முழுவதும் 30 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் அதிக அளவில் கர்ப்பப்பை புற்றுநோய் மற்றும் மார்பக புற்று நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் புற்றுநோய் முழுமையாக பரவிய பிறகு தான் சிகிச்சைக்கு வருகிறார்கள் எனவே அவர்களை நோயிலிருந்து காப்பாற்றுவது அரிதாகிவிட்டது. எனவே இந்த வகை புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிந்து அரசு, தொண்டு நிறுவனங்களும் தனியார் நிறுவனங்களும் ஆர்வம் காட்டி வருகின்றன.
அந்த வகையில் காஞ்சிபுரம் ரயில்வே சாலையில் உள்ள பேரறிஞர் அண்ணா புற்றுநோய் மருத்துவமனையில் பல்வேறு தனியார் அமைப்புகள் இணைந்து மகளிர் நலம் என்ற பெயரில் சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் 30 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு உடல் பருமன் ரத்த அழுத்தம் ரத்தசோகை, நீரிழிவு, கர்ப்பப்பை மற்றும் மார்பக புற்றுநோயை கண்டறியும் இலவச பரிசோதனை முகாம் நடைபெற்றது.
உங்கள் நகரத்திலிருந்து(காஞ்சிபுரம்)
இந்த முகாமில் அரசு புற்றுநோய் மருத்துவமனையின் முன்னாள் நிலைய மருத்துவ அலுவலரும், இந்திய மருத்துவக் கழகத்தின் காஞ்சிபுரம் மாவட்டத் தலைவருமான எஸ்.மனோகரன் பங்கேற்று முன்னிலை வகித்தார். பெண்களை அதிகம் தாக்கும் கர்ப்பப்பை மற்றும் மார்பக புற்றுநோய் கண்டறிதல் குறித்து அவர் கூறினார்,”30 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு உடல் பருமன்,இரத்த அழுத்தம்,இரத்த சோகை,நீரழிவு நோய் போன்ற நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. மேலும் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகளும் உள்ளன. எனவே அவற்றின் அறிகுறிகள் தெரிந்தால் உடனடியாக பரிசோதனை செய்ய வேண்டும்” என்று கூறினார்.
மேலும் அவர் கூறியது,”ரத்த சோகை வரும் பொழுது அவர்களுக்கு சுறுசுறுப்பின்மை, சோம்பலாக இருப்பது, மிகவும் அயர்ச்சியாக உள்ளது போன்ற அறிகுறிகள் இருக்கும் என்றும் அவர்கள் தங்கள் ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவை தெரிந்து கொள்ள குறைவாக இருந்தால் அதற்கேற்ப முருங்கைக்கீரை மற்றும் வெள்ளம், பேரிச்சம்பழம் ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொண்டால் ரத்த சோகை நோயில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ளலாம். என்றும் மிகவும் ஹீமோகுளோபின் குறைவாக உள்ளவர்கள் மருத்துவ ஆலோசனை மேற்கொண்டு முறையான இரும்பு சத்து மாத்திரைகளை உட்கொண்டு அவர்கள் தங்களை ரத்த சோக நோயிலிருந்து பாதுகாத்துக் கொள்ளலாம் என்று தெரிவித்தார்.
மேலும் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் முறையாக ரத்த அழுத்தத்தில் இருப்பின் அவர்கள் தங்களது யூரியா மற்றும் கிரியாட்டின் அளவை பரிசோதிக்க வேண்டும் என்றும் மேலும் சிறுநீரக பரிசோதனை செய்து அதற்கு ஏற்றார் போல் சிகிச்சை பெற வேண்டும் என்றும் தெரிவித்தார்.
அடுத்தபடியாக மாறுபட்ட உணவு பழக்கங்கள் மற்றும் உட்கார்ந்து கொண்டே வேலை செய்வது மற்றும் உடற்பயிற்சியின்மை காரணமாக உடல் பருமன் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. மேலும் அவற்றின் காரணமாக மாரடைப்பு வர வாய்ப்புள்ளது எனவே அவர்கள் தங்களது உடல் பருமனை பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் ஆறு மாதத்திற்கு ஒரு முறை அல்லது மூன்று மாதத்திற்கு ஒரு முறை ஐசிஜி எடுத்து பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார். இதன் மூலம் முதற்கட்டமாக இருதய நோய் வரும் வாய்ப்புகளை தவிர்க்கலாம் என்று தெரிவித்தார்.
இறுதியாக பெண்களுக்கு புற்றுநோயானது மார்பகம் மற்றும் கர்ப்பப்பையில் அதிகமாக வர வாய்ப்புகள் உள்ளன. எனவே அவர்கள் தங்கள் மார்பகங்களில் ஏதேனும் கட்டி அல்லது வலி அல்லது ஏதேனும் மாறுதல் ஆகிய அறிகுறிகள் இருந்தால் உடனடியாக பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் ஒவ்வொரு மாதமும் மாதவிடாய்க்கு பிறகு மார்பகங்களை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றும் ஏதேனும் மாற்றங்கள் அல்லது சந்தேகம் இருந்தால் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையை அணுகி முறையான பரிசோதனை மேற்கொண்டு கட்டத்திலேயே புற்றுநோயை தடுக்க முடியும்” தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV: