ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வட்டாரத்தில் உள்ள வெங்கலூர் கிராமத்தில் சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் பெரிய கண்மாய் உள்ளது. இந்த கண்மாய் ராமநாதபுரம் மாவட்டத்திலேயே 2வது பெரிய கண்மாய் ஆகும்.
இந்நிலையில், விவசாயம் செய்து அறுவடை பணிகள் முடிந்த நிலையில், கோடை வெயிலின் தாக்கத்தால் கண்மாய் நீர் வற்றத்தொடங்கியது. இதனால் மழைபெய்ய வேண்டியும், விவசாயம் செழிக்க வேண்டியும் வெங்கலூர் கிராமத்தில் மீன்பிடி திருவிழாவானது, நடத்தப்படும்.
இதனைத்தொடர்ந்து, ஆண்கள், பெண்கள் என 500க்கும் மேற்பட்டோர், குடும்பம் குடும்பமாக காலை முதல் கண்மாய்க்கு வந்து கரை ஓரத்தில் காத்திருந்தனர். திருவிழா தொடங்கப்பட்டு கொடியசைக்கப்பட்ட பின் அனைவரும் கண்மாய்க்குள் இறங்கி போட்டி போட்டு மீன்பிடிக்க தொடங்கினர்.
உங்கள் நகரத்திலிருந்து(ராமநாதபுரம்)
இதில் நாட்டுவகை மீன்களான கெண்டை, கெளுத்தி, கட்லா, ஜிலேபி போன்ற மீன்கள் ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் குறைந்தபட்சம் 3 கிலோவிற்கு மேல் கிடைத்ததால் அனைவரும் மகிழ்ச்சியோடு சென்றனர்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
10 ஆண்டுகளுக்குப் பிறகு வெங்கலூர் பெரிய கண்மாயில் மீன்பிடி திருவிழா நடைபெற்றது, கிராம மக்கள் உற்சாகத்துடன் கலந்து கொண்டு மீன்பிடித்து சென்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV: