கிரெயின்ஸ் (GRAINS) என்ற வேளாண் அடுக்ககம் வலைதளத்தில் விவசாயிகள் பதிவேற்றம் செய்ய ஏப்ரல் 19-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை 3 நாட்கள் கிராம நிர்வாக அலுவலகங்களில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.

அரசின் நலத்திட்ட உதவிகளை பெற விவசாயிகள் “கிரெயின்ஸ்’ இணையதளத்தில் பதிவு செய்ய நாளை (புதன்கிழமை) முதல் 3 நாட்களுக்கு சிறப்பு முகாம் கிராம நிர்வாக அலுவலகங்களில் நடக்கிறது மற்றும் நில உடமை வாரியாக சாகுபடி, பயிர் விவரம் ஆகிய அடிப்படை விவரங்கள் கொண்டு கிரெயின்ஸ (குரோவர் ஆன்லைன் ரிஜிஸ்ட்ரேசன் ஆப் அக்ரிகல்சுரல் இன்புட் சிஸ்டம்) என்ற வலைதளம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த கிரெயின்ஸ் வலைதளத்தில் விவசாயிகள் பயனடையும் வகையில் வருவாய்த்துறை, பேரிடர் மேலாண்மை துறை, வேளாண்மை உழவர் நலத் துறை, தோட்டக்கலைத் துறை, கூட்டுறவுத்துறை, பட்டுவளர்ச்சித்துறை, உணவு வழங்கல் துறை, கால்நடைப் பராமரிப்புத் துறை, ஊரக வளர்ச்சித் துறை, வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை, விதைச்சான்றளிப்பு துறை, வேளாண் பொறியியல் துறை , சர்க்கரை துறை உள்ளிட்ட பல்வேறு துறை இணைக்கப்பட்டுள்ளது.

உங்கள் நகரத்திலிருந்து(கன்னியாகுமரி)

கன்னியாகுமரி

கன்னியாகுமரி

மேலும் இந்த வலைதளம் மூலம் அரசின் நலத்திட்டங்கள் சரியான பயனாளிக்கு சென்றடைவதை உறுதிப்படுத்த முடியும். ஒற்றை சாளர வலைதளமாக செயல்படுவதால் விவசாயிகள் அனைத்து பயன்களுக்கும் ஒரே இடத்தில் பதிவு செய்து அரசின் உதவிகளை பெற்றுக் கொள்ளலாம்.

ஒவ்வொரு முறையும் பயன்பெற விவசாயிகள் விண்ணப்பிக்கும் போது ஆவணங்கள் சமர்ப்பிக்க வேண்டியதில்லை. விவசாயிகள் நேரடியாக வலைதளத்தில் பதிவு செய்வதால் முன்னுரிமை அடிப்படையில் அரசின் பயன்களைப் பெற்றுக் கொள்ளலாம். வேளாண்மை சார்ந்த அனைத்து துறைகளும் விவசாயிகளின் அடிப்படை விவரங்கள் மற்றும் பயிர் விவரங்களை தெரிந்து கொண்டு அதற்கேற்ற பயன்களை அளிக்க முடியும். திட்ட நிதி பலன்கள் நேரடி பண பரிமாற்றம் மூலம் அனுப்பப்படும்.

மேலும் இந்த வலைதளத்தில் விவசாயிகள் தங்கள் ஆதார் அட்டை நகல், புகைப்படம் நகல், வங்கி கணக்கு புத்தக நகல், நிலப்பட்டா, ஆவண நகல் ஆகியவற்றைக் கொண்டு பதிவு செய்து கொள்ளலாம். இதில் வேளி மலை, வில்லுக் குறி, அடைக்காகுழி, தேங் காப்பு, கொல்லங் கோடு ஏ, கீழ் மிடாலம் பி, பெருஞ்சாணி, பாகோடு, தேவிகோடு, அருமனை, பாகோடு ஏ, மாதவலாயம், நாவல்காடு ஆகிய 13 கிராமங்களில் உதவி வேளாண்மை அலுவலர்கள் தலைமையிலும், வெள்ளம் கோடு, அண்டு கோடு பி, களியல் , பொன்மனை பி, ஆரல்வாய்மொழி வடக்கு ஆகிய 6 கிராமங்களில் உதவித் தோட்டக்கலை அலுவலர்களின் தலைமையிலும், இதர கிராமங்களில் சம்மந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர்களின் தலைமையிலும் அந்தந்த கிராம நிர்வாக அலுவலர்களின் சிறப்பு முகாம்கள் நாளை (19-ந்தேதி) முதல் 21-ந்தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது.

இந்த முகாமில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் மேற்கண்ட ஆவணங்களை சம்மந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர், உதவி வேளாண்மை அலுவலர், உதவி தோட்டக்கலை அலுவலரிடம் அளித்து இந்த கிரெயின்ஸ் வலைதளத்தில் அடிப்படை விவரங்களை பதிவு செய்து அதை உறுதி செய்து கொள்ளலாம். இதன் மூலம் அரசின் நலத்திட்ட உதவிகளை பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV போன்றவற்றைக் காணலாம்.



Source link