காஞ்சிபுரம் அருகே உள்ளஅங்கம்பாக்கம் அரசு நடுநிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு பள்ளி ஆசிரியர்கள் ஒன்றிணைந்து தலை வாழை இலை விருந்து வழங்கி மகிழ்வித்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் ஒன்றியத்தில் உள்ள அங்கம்பாக்கம் அரசு நடுநிலைப் பள்ளியில் 125 மாணவர்கள் பயந்து வருகின்றனர். இந்த பள்ளியில்ஆசிரியர்கள் ஒன்றிணைந்து, ஆண்டுதோறும் மாணவர்களுக்கு இவ்வாறு தலை வாழை இலை விருந்து வழங்கப்படுவது வழக்கம்.
அதன்படி, மாணவர்கள், கிராமத்தின் தூய்மைக் காவலர்களுக்கும் தலை வாழை இலை விருந்து கொடுத்து சிறப்பிக்கப்பட்டனர். மேலும், மாணவர்களுக்கு வடை, பாயாசம், இனிப்பு மற்றும் ஐஸ் கிரீம் ஆகியவற்றுடன் அறுசுவை உணவு வழங்கப்பட்டது.
உங்கள் நகரத்திலிருந்து(காஞ்சிபுரம்)
பள்ளியின் தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து இந்த ருசிகர செயலை செய்ததற்கு மாணவர்களும், பெற்றோரும் கிராம மக்களும் அவர்களை பாராட்டி மகிழ்ந்தனர். இந்த விருந்து நிகழ்வில் ஊராட்சி மன்ற தலைவர் ஏழுமலை, தலைமையாசிரியர் தணிகை அரசு தலைமையில் நடைபெற்றது.
மேலும்,பட்டதாரி ஆசிரியர்கள் குளோரி, லதா, சேகர், ஆசிரியர்கள் சீனிவாசன், கலைவாணன், பொற்கொடி மற்றும் வார்டு உறுப்பினர் பாவலன், பள்ளி மேலாண்மைக்குழு கல்வியாளர் செங்குட்டுவன் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV போன்றவற்றைக் காணலாம்.