விழுப்புரத்தில் துணை போக்குவரத்து ஆணையர் ரஜினி உத்தரவின்பேரில் வட்டார போக்குவரத்து அலுவலர் வெங்கடேசன் தலைமையிலான குழுவினர், பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் அதிக ஒலி எழுப்பும் காற்று ஒலிப்பான்களை அதிரடியாக பறிமுதல் செய்தனர்.
விழுப்புரத்தில் பேருந்துகளை நிறுத்தி ஆய்வு செய்து அதிக ஒலி எழுப்பக்கூடிய ஏர் ஹாரன்களை ஆய்வு செய்தனர். அப்போது, 40 அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் இருந்து அதிக ஒலி எழுப்பிய ஹாரன்கள் அகற்றப்பட்டன.

பேருந்துகளுக்கு எச்சரிக்கை விடுத்த அதிகாரிகள்
உங்கள் நகரத்திலிருந்து(விழுப்புரம்)
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
குறிப்பாக விழுப்புரத்தில் இருந்து பாண்டிச்சேரி மற்றும் கடலூர் செல்லும் தனியார் பேருந்துகளில் அதிவேகமாக பேருந்துகளை இயக்க கூடாது என்றும் எச்சரித்தனர். மேலும், இந்த நடவடிக்கையை தொடர்ந்து நடைபெறும் என வட்டார போக்குவரத்து ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV: