காஞ்சிபுரத்தில் இஸ்லாமிய பெருமக்கள் அதிகம் வசிக்கும் பகுதியான ஒலிமுகமது பேட்டையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் சார்பில் சிறப்பு தொழுகை நடைபெற்றது.

இஸ்லாமிய பெருமக்கள் பெருமையுடன் கொண்டாடும் ரமலான் எனும் ஈகைத் திருநாள் நாடு முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. ரமலான் நோன்பு ஈகைத்திருநாளை முன்னிட்டு காஞ்சிபுரத்தில் இஸ்லாமிய பெருமக்கள் அதிகம் வசிக்கும் பகுதியான காஞ்சிபுரம் ஒலி முகமது பேட்டை பகுதியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் சார்பில் சிறப்பு தொழுகை நடைபெற்றது.

இந்த சிறப்புத் தொழுகையில் ஆண்கள் பெண்கள் என இஸ்லாமியர்கள் புத்தாடைகள் அணிந்து வந்து, தொழுகை நடத்தினர். பின்னர், சகோதரத்துவத்தை வலியுறுத்தும் வகையில் ஒருவரை ஒருவர் கட்டி அணைத்து ரமலான் நோன்பு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

உங்கள் நகரத்திலிருந்து(காஞ்சிபுரம்)

காஞ்சிபுரம்

காஞ்சிபுரம்

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

பின்னர் அனைவரும் ஒன்று கூடி ரமலான் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டு உலக மக்கள் நன்மை அடைய சிறப்பு பிரார்த்தனை செய்தனர். பின்னர் தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் சார்பில் ஏழை, எளிய முஸ்லிம்களுக்கு மளிகை உள்ளிட்ட பொருட்களை வழங்கி வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:



Source link