விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை பகுதியில் அருப்புக்கோட்டையிலிருந்து பாளையம்பட்டி செல்லும் சாலையில் அருப்புக்கோட்டை ரயில் நிலையம் அமைந்துள்ளது. கடந்த 1963ம் ஆண்டு திறக்கப்பட்ட இந்த இரயில் நிலையம் மானாமதுரை விருதுநகர் பாதையை இணைக்கும் ரயில் நிலையமாக ரயில் வருகிறது. இடையில் பராமரிப்புப் பணிகளுக்காக மூடப்பட்ட இந்த ரயில் நிலையம் கடந்த 2008ஆம் ஆண்டு மீண்டும் ரயில் பாதையாக மாற்றப்பட்டு திறக்கப்பட்டது.
தற்போது இந்த ரயில் நிலையம் வழியாக மதுரை தூத்துக்குடி புதிய ரயில் பாதை அமைக்கும் பணி நடைபெற்று வரும் நிலையில், அந்த பணி முடிவடைந்த பின்னர் ரயில் நிலையம் சந்திப்பாகதரம் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ரயில் நிலையத்தில் குடிநீர் வசதி, கழிப்பிட வசதி போன்ற அடிப்படை வசதிகள் போதுமானதாக இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
குறிப்பாக 2 நடைமேடைகளை கொண்ட இந்த ரயில் நிலையத்தில் ஆங்காங்கே அமைக்கப்பட்ட குடிநீர் குழாய்களில் தண்ணீர் வருவதில்லை. தற்போது மொத்த ரயில் நிலையத்திற்கும் ஒரேயொரு குடிநீர் குழாய் மூலம் தண்ணீர் வழங்கப்பட்டு வரும் நிலையில், அதுவும் முறையாக பராமரிக்கப்படுவதில்லை என்பதே ரயில் பயணிகளின் குற்றச்சாட்டாக உள்ளது.
உங்கள் நகரத்திலிருந்து(விருதுநகர்)
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
புதிய இரயில் பாதை அமைக்கும் பணி முடிந்த பின் அருப்புக்கோட்டை ரயில் நிலையம் முக்கியத்துவம் பெறும் என்பதை கருத்தில் கொண்டு ரயில்வே நிர்வாகம் விரைந்து அருப்புக்கோட்டை ரயில் நிலையத்தை மேம்படுத்த வேண்டும் என இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV: