திருநெல்வேலி மாவட்டத்தின் பல இடங்களில் மார்ச் முதல் வாரத்தில் இருந்தே வெயிலின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியது. இதனால், வெப்பநிலை உயரத் தொடங்கியது. இந்த வெப்பம் படிப்படியாக அதிகரித்து வந்தது.

சமீபத்தில் பாளையங்கோட்டையில் 100 டிகிரி பாரன்ஹீட் அளவுக்கு வெப்பநிலை பதிவாகி இருந்தது. இதனிடையே கிழக்கு திசை காற்றில் ஏற்பட்டுள்ள வேகமாறுபாடு காரணமாக, தென் தமிழகம் மற்றும் வட தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், திருநெல்வேலியில் மதியம் வரை வெயில் கொளுத்திய நிலையில், திடீரென மாலையில் குளிர்ச்சியாக வானிலை மாறியது.

உங்கள் நகரத்திலிருந்து(திருநெல்வேலி)

திருநெல்வேலி

திருநெல்வேலி

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

அதனைத் தொடர்ந்து இடி மின்னலுடன் கூடிய கனமழை கொட்டியது. இதேபோல் புறநகர் பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. இந்த திடீர் மழையால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. பல வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இந்த திடீர் மழையால் கோடை வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவுவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:



Source link