புதுக்கோட்டை பெரும்பான் நாட்டில் உள்ள வைரம் பப்ளிக் சிபிஎஸ்இ பள்ளி சர்வதேச அளவில் பூமி தினத்தை ஒட்டி சுற்றுச்சூழலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் விதமாக, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து புதிய பேருந்து நிலையம் வரை பள்ளி மாணவ, மாணவிகள் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதமாக பதாகைகளை ஏந்தி பூமி, மரம் போன்ற வேடம் அணிந்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இந்த விழிப்புணர்வு பேரணியை பள்ளி செயலர், பள்ளி முதல்வர் துவக்கி வைத்தனர்.அதனைத் தொடர்ந்து புதிய பேருந்து நிலையம், புதுக்கோட்டை நகர் மன்ற தலைவர் திலகவதி செந்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு உறுதிமொழி எடுக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து பூமியை காக்கும் வகையில் கவிதைகளும் வாசிக்கப்பட்டது. பின்னர் பள்ளி மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. பூமியை காக்க சுற்றுச்சூழலை பாதுகாக்க மரம் வளர்ப்பின் அவசியம் குறித்து எடுத்துரைக்கும் மரக்கன்றுகளும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

உங்கள் நகரத்திலிருந்து(புதுக்கோட்டை)

புதுக்கோட்டை

புதுக்கோட்டை

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இந்நிகழ்ச்சியில் பள்ளி மாணவ மாணவிகள், மாணவர்களின் பெற்றோர்கள், பள்ளி ஆசிரியர்கள், அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:



Source link