விருதுநகரில் இருந்து சாத்தூர் செல்லும் சாலையில் புதிய பேருந்து நிலையம் அருகே கவுசிகா நதியின் மேல் அமைக்கப்பட்டுள்ள பாலத்தின் பக்கத்தில் திறந்த வெளியில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றன. இவற்றை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் நகராட்சிக்கு தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது இந்த குப்பைகள் அனைத்தும் அதே பாலத்திற்கு கீழே எரிக்கப்படுகின்றன.

இப்படி குப்பைகள் திறந்த வெளியில் குப்பைகள் எரிக்கப்படுவதால் உண்டாகும் புகை பாலத்தை சூழ்ந்து அப்பகுதியே புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. இதனால் அவ்வழியாக செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு கண் எரிச்சல் ஏற்படுவதுடன் சில நேரங்களில் மூச்சு திணறலும் ஏற்படுவதாக கூறப்படுகிறது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

உங்கள் நகரத்திலிருந்து(விருதுநகர்)

விருதுநகர்

விருதுநகர்

நகராட்சி பகுதியில் திடக்கழிவு மேலாண்மை விதிகளை முறையாக பின்பற்றி குப்பைகள் கையாளப்படாமல் ஏராளமான இடங்களில் திறந்த வெளியில் எரிக்கப்படும் நிலையில், நகராட்சி நிர்வாகம் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:



Source link