புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தொகுதிக்கு உட்பட்ட ஆவுடையார் கோவில் தாலுகாவில் உள்ளது கரூர் கிராமத்தில் காவல் நிலையம் ஒன்று உள்ளது. இந்த காவல் நிலைய கட்டிடம் சேதமடைந்து, கட்டுமானம் இடிந்து, கீழே விழும் நிலையில் உள்ளது. அதன் அருகில் கால்நடை மருத்துவமனையும் உள்ளது. எதிர் முனையில் அரசினர் மாணவர் விடுதி உள்ளது.

இந்நிலையில், அந்த கட்டிடத்திற்கு, சிறுவர்களும், பள்ளி மாணவர்களும் அடிக்கடி விளையாடுகின்றனர். அங்கே சென்று விளையாடக் கூடாது என்று பெற்றோர்கள் அறிவுரை வழங்கியபோதும், சிறுவர்கள் அங்கு சென்று விளையாடுவதாகச் சொல்லப்படுகிறது.

இவ்வாறு சிறுவர்கள் அங்கே விளையாடும்போது, ​​அந்த காவல் நிலைய கட்டிடம் இடிந்து விழுந்தால், சிறுவர்களின் உயிருக்கே அது ஆபத்தாக முடிந்துவிடும் என அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

உங்கள் நகரத்திலிருந்து(புதுக்கோட்டை)

புதுக்கோட்டை

புதுக்கோட்டை

இதையும் படிங்க | நெம்மகோட்டை சித்தி விநாயகர் கோயிலின் புதிய வைர தேர் வெள்ளோட்டம்!

எனவே, அந்த கட்டிடத்தை இடித்து விட்டு புதிய கட்டிடத்தை அந்த இடத்திலேயே கட்ட வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கட்டிடம் சோமடைந்திருப்பதால், காவல்நிலையம், அப்பகுதியில் உள்ள நலக்கூடத்தில் தற்காலிகமாக சமுதாய சமுதாயம் வருகிறது. இந்த சமுதாயக்கூடாதல், குற்றவாளிகளை அடைந்து வைப்பதற்கு போதிய வசதி இல்லை என்று சொல்லப்படுகிறது.

எனவே, இடிந்துவிழும் நிலையில் உள்ள பழைய கட்டிடத்தை இடித்து விட்டு, அதே இடத்தில் புதிய கட்டிடம் கட்டி தர வேண்டும் என்று கரூர் கிராம மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:



Source link