புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள பிரசித்தி பெற்ற நெம்மகோட்டை சித்தி விநாயகர் கோவிலின் புதிய வைர தேர் வெள்ளோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள நெம்மகோட்டை கிராமத்தில் ஸ்ரீ சித்தி விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவில் பகுதியில் பிரசித்தி பெற்ற கோயிலாக திகழ்கிறது.

இங்கே, புதிய வைர தேர் செய்யும் பணி கடந்த சில ஆண்டுகளாக நடந்து வந்தது. இந்நிலையில் வைரத்தேர் செய்யும் பணி முழுமையாக நிறைவடைந்தது.

உங்கள் நகரத்திலிருந்து(புதுக்கோட்டை)

புதுக்கோட்டை

புதுக்கோட்டை

அதனைதௌ தொடர்ந்து, புதிய வைர தேர் வெள்ளோட்ட விழா கோலாகலமாக நடைபெற்றது. இதில் சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள், வைரத் தேர் வெள்ளோட்ட விழாவில் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து விநாயகரை வழிபட்டனர்.

இந்த வைரத் தேர், கோவிலைச் சுற்றி பக்தர்களின் கரகோஷத்தோடு நான்கு வீதிகளிலும் வலம் வந்து நின்றது. இதனைத் தொடர்ந்து, இந்த கோயிலின் சித்திரை திருவிழா கட்டுதலுடன் தொடங்கி நடைபெற உள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:



Source link