பரமக்குடி அருகே என்.வளையனேந்தல் கிராமத்தில் அருள்பாலித்து வரும் ஸ்ரீ கருமேனி அம்மன் கோவில் கும்பாபிஷேகமானது பக்தர்கள் சூழ வெகு விமர்சையாக நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள என்.வளையனேந்தல் கிராமத்தில் அருள்பாலித்து வரும் ஸ்ரீ கருமேனி அம்மன் கோவில், இந்த கோவில் பழமையானது என்பதால் ஊர்மக்கள் சார்பில் இந்த கோவில் முழுவதும் புதுப்பிக்கப்பட்டது. இதையடுத்து, கடந்த சனிக்கிழமை நடந்த யாகசாலை பூஜையானது, நவக்கிரக ஹோமம், சுதர்சன ஹோமம், மகாசாந்திஹோமம், போன்ற பூஜைகளுடன் நடைபெற்றது.

இதனைத்தொடர்ந்து, காலையில் ஸ்ரீ கருமேனி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க கலசங்களில் புனிதநீரானது ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் விமர்சையாக நடைபெற்றது.

உங்கள் நகரத்திலிருந்து(ராமநாதபுரம்)

ராமநாதபுரம்

ராமநாதபுரம்

இதையும் படிங்க | கமுதியில் வெயிலின் தாக்கத்திலிருந்து குளிர்வித்த கோடை மழை!

இந்த கும்பாபிஷேகத்தில் பரமக்குடியைச் சேர்ந்த சுமார் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து ஸ்ரீ கருமாரி அம்மனின் அருளைப் பெற்றுச் சென்றனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:



Source link