பழனி முருகன் கோயிலில் ரோப்கார் சேவை இன்றும் (ஏப்.25) நாளையும் (ஏப்.26) ரத்து செய்யப்படுவதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3ஆம் படைவீடான பழனி முருகன் கோயிலுக்கு தினமும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்கிறார்கள். இந்த கோயிலில் சமீபத்தில் கும்பாபிஷேகம் நடந்த நிலையில், பக்தர்களின் வருகை சற்று அதிகமாகவே உள்ளது.
அப்படி வரும் பக்தர்கள் எளிதில் மலைக்கோயிலை அடைய ரோப் கார் சேவை, மின்வை ரயில் போன்ற சேவைகள் உள்ளன. இந்த சேவையில் பயணம் செய்தால் விரைவாக செல்லலாம். மேலும் இந்த பயணம் நல்ல சுற்றுலா அனுபவத்தையும் கொடுக்கும்.
உங்கள் நகரத்திலிருந்து(திண்டுக்கல்)
இதனால் பக்தர்கள் செல்வதை விட இந்த ரோப் காரில் பயணிப்பதையே விரும்புகின்றனர்.
மேலும் பார்க்க…நவபாஷாணம் என்றால் என்ன? பழனி முருகன் சிலையில் ஏன் நவபாஷாணம் வைக்கப்பட்டது தெரியுமா?
தற்போது கோடை காலம் தொடங்கியுள்ளதால் வயதானவர்கள், குழந்தைகளுடன் வரும் பக்தர்கள் ரோப்கார் மூலம் அதிகமான கோயிலுக்கு வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த ரோப் கார் சேவைக்குபக்தர்களின் பாதுகாப்பு கருதி மாதந்தோறும் பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். அது போல் பராமரிப்பு பணிகளும் நடைபெறும். அந்த நேரத்தில் ரோப் கார் சேவை நிறுத்தப்படும். அந்த வகையில் இந்த மாத பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இன்று (ஏப்.25) நாளையும் (ஏப்.26) ரோப் கார் சர்வீஸ் ரத்து செய்யப்படுகிறது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
எனவே பக்தர்கள் மின் இழுவை ரயில் அல்லது படிப்பாதை வழியாக மலைக்கோயிலுக்கு செல்லலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வரும் ஏப்.27 (வியாழக்கிழமை) முதல் ரோப் கார் வசதி வழக்கம் போல் செயல்படும் என்றும் கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV: