விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க இடங்களைப் பற்றிய பொருட்கள் அறிந்து கொள்ள விருதுநகர் அரசு அருங்காட்சியகத்தில் புகைப்படக் கண்காட்சி நடைபெற்று வருகிறது.
ஏப்ரல் 18 உலக மரபு தினத்தை முன்னிட்டு விருதுநகர் அரசு அருங்காட்சியகத்தில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தொல்லியல் எச்சங்கள் மற்றும் வரலாற்று சிறப்புமிக்க இடங்களின் புகைப்படங்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இதில் சென்னல்குடி சிவன் கோயில், திருச்சுழி சுந்தர பாண்டிய மன்னன் பள்ளிப்படை, செவல்பட்டி குடைவரை கோயில் என இதுவரை மாவட்டத்தில் அறியப்படாத வரலாற்று சிறப்புமிக்க இடங்களின் புகைப்படங்களும் அது குறித்து விளக்கங்களும் வைக்கப்பட்டுள்ளன.
இது குறித்து பேசிய அருங்காட்சியக காப்பாட்சியர் பால்துரை, உலக மரபு தினத்திற்காக பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அறியப்படாத தொல்லியல் எச்சங்களை பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக முன்னதாகவே இந்த இடங்களை பற்றி விசாரித்து அங்கு நேரில் சென்று புகைப்படங்கள் எடுத்து, அவற்றை பற்றிய விளக்கங்களை தயாரித்து தற்போது அதை காட்சிக்கு வைத்துள்ளதாக தெரிவித்தார்.
உங்கள் நகரத்திலிருந்து(விருதுநகர்)
மேலும் ஏப்ரல் 18 ஆம் தேதி தொடங்கிய இந்த கண்காட்சி இம்மாத இறுதி வரை நடைபெறும் என்றும் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் இங்கு வந்து பார்வையிட்டு இந்த இடங்களை பற்றி தெரிந்து கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்தார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV: