வேங்கைவயல் விவகாரத்தில் குற்றவாளிகளை கண்டறிய, மருத்துவர்கள் நேரம் கொடுத்த பிறகு 11 பேரிடம் ரத்த மாதிரிகள் எடுக்கப்படும் என சிபிசிஐடி காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
மனித குலத்திற்கே தலைகுனிவை ஏற்படுத்திய வேங்கைவயல் சம்பவம் குறித்து சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில், மனிதக்கழிவு கலக்கப்பட்டது தொடர்பாக, கீழ முத்துக்காடு பகுதியை சேர்ந்த 11 பேரிடம் டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட சிபிசிஐடி நீதிமன்றத்தை நாடியது. டிஎன்ஏ பரிசோதனைக்கு ரத்த மாதிரி எடுக்க வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
இதையும் படிங்கள்: ஜி ஸ்கொயர் நிறுவனங்களில் 2வது நாளாக தொடரும் ஐடி ரெய்டு..!
உங்கள் நகரத்திலிருந்து(புதுக்கோட்டை)
இந்நிலையில், புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உதவிப் பேராசிரியர் தலைமையிலான மருத்துவக்குழுவினர் டிஎன்ஏ பரிசோதனைக்கு ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. காலை 10 மணிக்கு மேல் நேரம் கொடுத்த பிறகு, 11 பேரிடம் ரத்த மாதிரிகள் எடுக்கப்படும் என்றும் சிபிசிஐடி காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV: