நீலகிரி மாவட்டத்தில் 14 வயது சிறுமியை உறவினர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்து கொன்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உதகை அருகே பகல்கோடு மந்து பகுதியில் பெற்றோருடன் வசித்து வந்த 14 வயது சிறுமி, அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார். வழக்கம் போல் பள்ளிக்கு சென்ற சிறுமி மாலை வீடு திரும்புவதற்காக பேருந்து நிலையத்தில் காத்திருந்தார். அப்போது அவ்வழியே காரில் சென்ற அவரது உறவினரான ராஜ்னேஷ் குட்டன் என்பவர், சிறுமியை வீட்டில் விடுவதாக கூறி அழைத்து சென்றுள்ளார். பைக்காரா சாலை வழியே சென்ற அவர் வனப்பகுதிக்குள் சிறுமியை கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

சிறுமி வீட்டில் நிச்சயம் காட்டிக்கொடுத்து விடுவார் என்று எண்ணிய ராஜ்னேஷ், காரில் இருந்த உபகரணங்களால் சிறுமி அடித்து துடிதுடிக்க கொன்றுள்ளார். பின்னர் சிறுமியின் உடலை அங்கேயே போட்டுவிட்டு காரில் அதிவேகமாக பயணித்த அவரை பொதுமக்கள் தடுத்து நிறுத்திய நிலையில், காரை விட்டு அவர் தப்பியோடிவிட்டார். இதனிடையே சிறுமி வீடு திரும்பாததால் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அருகே உள்ள இடங்களில் தேடி பார்த்தனர்.

உங்கள் நகரத்திலிருந்து(நீலகிரி)

இதையும் படிங்க; வெயிலுக்கு விட்டாச்சு சம்மர் லீவு… 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு… வானிலை அலர்ட்..!

அப்போது வனப்பகுதிக்குள் இருந்து சிறுமியின் உடலை மீட்டு கொண்டு வந்தனர். தகவலறிந்த காவல்துறையினர் சிறுமியின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சிறுமியின் தோழிகள் கொடுத்த தகவலின்படி ராஜ்னேஷ் மீது போலீசார் வழக்குப்பதிவு. சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்டாரா? என்றும் சந்தேகிக்கப்படுகிறது. தலைமறைவாக உள்ள ராஜநேஷை 3 தனிப்படை காவலர்கள் தீவிரமாக தேடி வருகின்றனர்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:



Source link