நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே பட்டணம் பள்ளத்து கருப்புசாமி கோவிலில் 1 டன் எடை, 21 அடி உயரம் கொண்ட பிரம்மாண்டமான 2 அரிவாள் பூஜைகள் செய்யப்பட்ட பிறகு கிரண் உதவியுடன் நடந்தது.
ராசிபுரம் அடுத்த பட்டணம் பஞ்சாயத்தில் பிரசித்தி பெற்ற பள்ளத்து கருப்புசாமி கோவில் உள்ளது. இங்கு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை கிடா வெட்டி பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடைபெறும். இதில், சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஒரே இரவில் மட்டும், ஆயிரக்கணக்கான ஆட்டு கிடாக்கள் வெட்டப்படுவது வழக்கம்.
தற்போது தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருவிழா நடைபெறாத நிலையில் நடப்பாண்டு வரும் 26ம் தேதி விழா நடைபெறுகிறது.
உங்கள் நகரத்திலிருந்து(நாமக்கல்)
இக்கோவிலுக்கு பட்டராஜா பகுதியைச் சேர்ந்த வள்ளி மருத்துவமனை உரிமையாளர் இ, மனைவி சாந்தி ஆகியோர் 1 டன் எடையும், 21 அடி உயர பிரமாண்ட இரும்பிலான அரிவாள் மற்றும் கை வடிவிலான 5 அடி கொண்ட கிரனைட் பீடம் என மொத்தம் 21 அடி கொண்ட 2 பிரமாண்ட அரிவாளை காணிக்கையாக வழங்கினர். இதனை கிரண் உதவியுடன் கோவிலின் முன் பூஜைகள் நடத்தப்பட்டது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV: