புதுடெல்லி: காங்கிரஸ் அளித்த வாக்குறுதிகள் அனைத்தும் பொய்த்துவிட்டன; இனி வாக்குறுதி தரமுடியாத நிலையில் அக்கட்சி உள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
அடுத்த மாதம் 10-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தலைச் சந்திக்க உள்ள கர்நாடக மாநில பாஜக பூத் கமிட்டி நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி வியாழக்கிழமை காணொளி மூலம் உரையாற்றினார். அப்போது பிரதமர், "கர்நாடக மக்கள் பாஜக மீது மிகப்பெரிய நம்பிக்கை வைத்துள்ளனர். அந்த நம்பிக்கையானது பிரச்சாரத்திற்காக பாஜக தலைவர்கள் செல்லுமிடங்களில் எல்லாம் வெளிப்படுகிறது. 10 ஆண்கள் மற்றும் 10 பெண்கள் அடங்கிய சிறு குழுக்களை உருவாக்குங்கள். அவர்கள் கர்நாடகாவின் ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று இரட்டை எந்திர ஆட்சியின் நன்மைகள் குறித்து எடுத்துக் கூற வேண்டும். அனைத்து செய்திகளையும் நீங்கள் டைரியில் குறிப்பெடுத்துக்கொள்ளுங்கள். ஒவ்வொரு வீட்டிலும் ஒரு மணிநேரம் செலவழிக்கவும். வீட்டில் இருக்கும் பெரியவர்களிடம் ஆசை வாங்குங்கள்" என்று வலியுறுத்தினார்.