தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள கோம்பை பேரூராட்சியில் வசிக்கும் பொதுமக்கள் ஸ்ரீமாரியம்மன் மற்றும் காளியம்மன் கோவிலில் நாள்தோறும் இறை வழிபாடு நடத்தி வருகின்றனர். அந்த அம்மன் திருக்கோவில்களில் வருடம் தோறும் சித்திரை மாத திருவிழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம்.

இந்நிலையில், இந்த வருட சித்திரை திருவிழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. சித்திரை திருவிழாவில் ஆயிரக்கணக்கான பெண் பக்தர்கள் விரதம் இருந்து காப்பு கட்டியதுடன் மழை வளம் பெற வேண்டி முளைப்பாரி வளர்த்து வந்தனர்.

கோம்பையில் களைக்கட்டிய காளியம்மன் கோயில் சித்திரை திருவிழா

உங்கள் நகரத்திலிருந்து(தேனி)

சித்திரை திருவிழாவின் முக்கிய நிறைவு விழாவாக ஊரின் வீதிகளில் அம்மன் கரகத்துடன் முளைப்பாரியினை தலையில் சுமந்து ஊர்வலமாக வந்த ஆயிரக்கணக்கான பெண் பக்தர்கள் அம்மன் கோவிலில் இறை வழிபாடு மற்றும் விசேஷ பூஜைகளை நடத்தி விவசாய ஆதாரமான புது குளத்தில் முளைப்பாரியினை கரைத்தனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை காளியம்மன் மற்றும் மாரியம்மன் கோவில் விழா கமிட்டியினர் பொதுமக்களுடன் ஒன்றினைந்து செய்தி வெளியிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV போன்றவற்றைக் காணலாம்.



Source link