புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கருக்காகுறிச்சி தெற்கு தெரு வீரக்குடி நாட்டைச் சேர்ந்த பிரசித்தி பெற்றதும், பழமை வாய்ந்ததுமான, ஸ்ரீசெல்லியம்மன் ஸ்ரீஅகோர வீரபத்திரர் கோவில் அமைந்துள்ளது.
இந்த கோவில் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் நடைபெறுவது வழக்கம். அதன் படி, இந்த ஆண்டிற்கான சித்திரை திருவிழா நடைபெறவுள்ளது.இதனை முன்னிட்டு, கருக்காக்குறிச்சி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளான வடதெரு, கருக்காடு தெற்கு தெரு, பட்டத்திக்காடு, காளகொள்ளை, வாணக்கன்காடு பெரியவிடுதி, கண்ணியான் கொல்லை, வாண்டான் விடுதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பெண்கள் பங்கேற்று கும்மியடித்து முளைப்பாரியை தலையில் சுமந்தபடி சென்றனர்.

முளைப்பாரி எடுத்த பக்தர்கள்
உங்கள் நகரத்திலிருந்து(புதுக்கோட்டை)
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
தொடர்ந்து அவர்கள், நொண்டி அய்யனார் கோவிலில் சுவாமி தரிசனம் செய்து பாளி குளத்தை மூன்று முறை சுற்றி வந்து முளைப்பாரியை பாளி குளத்தில் விட்டனர். இந்த 1000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். அதனைத் தொடர்ந்து இந்த விழாவுக்கு வருகை தந்து அனைவருக்கும் அறுசுவையுடன் கூடிய அன்னதானம் வழங்கப்பட்டது. பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வயிறார சாப்பிட்டு சென்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV: