நடிகர் பிரபுதேவா தனது முதல் மனைவி ரம்லத்தை விவாகரத்து செய்து விட்டு நடிகை நயன்தாராவைக் காதலித்து வந்தார். ஆனால் அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்துவிட்டனர். நயன்தாரா தற்போது இயக்குநர் விக்னேஷ் சிவனைக் காதலித்து, திருமணம் செய்து குழந்தைகளோடு வாழ்ந்து வருகிறார்.
பிரபுதேவா தற்போது நாயகனாகத் தொடர்ந்து நடித்து வருகிறார். இந்தியில் சல்மான் கான் படம் உட்பட சில படங்களை இயக்கவும் செய்தார்.

அதன் பின், பிரபுதேவா அவரின் உறவுக்காரப் பெண் ஒருவரை இரண்டாவது திருமணம் செய்யப்போவதாகச் செய்திகள் வெளியாகின. ஆனால், அது உண்மையில்லை என்பது தெரியவந்தது. இந்நிலையில், பிரபுதேவா மருத்துவமனையில் மும்பையில் முதுகு வலியால் அவதிப்பட்டபோது பிஸியோதெரபிஸ்ட் டாக்டர் ஹிமானி சிங்கிடம் சிகிச்சைக்காகச் சென்றார்.