தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலர் கொலை வழக்கின் விசாரணை அதிகாரியாக, தூத்துக்குடி புறநகர் டிஎஸ்பி சுரேஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் சூசை பாண்டியாபுரத்தை சேர்ந்த லூர்து பிரான்சிஸ் முறப்பநாடு கோவில்பத்து கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் மணல் கடத்தல் தொடர்பாக புகார் அளித்ததால் அவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த வழக்கை முறப்பநாடு காவல் ஆய்வாளர் ஜமால் விசாரித்து வந்தார்.
உங்கள் நகரத்திலிருந்து(தூத்துக்குடி)
இதனிடையே இந்த கொலை சம்பவத்தில் காவல் ஆய்வாளர் ஜமால், உதவி ஆய்வாளர் அந்தோணிராஜ் ஆகியோருக்கு தொடர்புள்ளதாக தாமிரபரணி பாதுகாப்பு இயக்கம் சார்பில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. அவர்களை கைது செய்ய வேண்டும் எனவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்பேரில் விசாரணை அதிகாரியான காவல் ஆய்வாளர் ஜமால் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக டி.எஸ்.பி சுரேஷை விசாரணை அதிகாரியாக நியமித்து தென்மண்டல ஐஜி அஸ்ரா கார்க் உத்தரவிட்டுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.