தஞ்சை மாவட்டத்தில் ஹெல்மெட் அணிவது கட்டாயம் பாரபட்சமின்றி அபராதம் விதிக்கப்படும் என்று கடந்த சில மாதங்களுக்கு முன்பு தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ்ராவத் உத்தரவிட்டார். இதனைத்தொடர்ந்து போக்குவரத்து காவல் துறையினர் ஹெல்மெட் அணியாத வாகன ஓட்டிகளுக்கு கடுமையான அபராதங்களை விதித்து வருகின்றனர்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ்ராவத் உத்தரவுப்படி தஞ்சை மாவட்ட போக்குவரத்து காவல் ஆய்வாளர் ரவிச்சந்திரன் தலைமையில் சோழன் சிலை அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அனைத்து மோட்டார் சைக்கிள்களையும் நிறுத்தி டிரைவிங் லைசன்ஸ், இன்சூரன்ஸ் சரியான முறையில் உள்ளதா? மோட்டார் வாகன சட்டப்படி நம்பர் பிளேட் உள்ளதா ? ஹெல்மெட் அணிந்துள்ளார்களா? குறித்து சோதனை செய்தனர்.

தஞ்சையில் வாகன ஓட்டிகளுக்கு பாரபட்சமின்றி அபராதம்
உங்கள் நகரத்திலிருந்து(தஞ்சாவூர்)
இதில் ஹெல்மெட் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளுக்கு ரூ.1000-ம், லைசன்ஸ், இன்சூரன்ஸ் இல்லாதவர்களுக்கு ரூ.5000-ம் அதை புதுப்பிக்காதவர்களுக்கு இருசக்கர வாகனங்களில் 2 பேருக்கு மேல் சென்றால் 1000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. , குடித்துவிட்டு வாகனம் ஓட்டியவர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
மேலும் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து காவல் துறையினர் அறிவுறுத்தினர். நம்பர் இல்லாமல் வெறும் வாசகம் மட்டும் எழுதி இருத்தல், வாகனத்தின் ஒரு பக்கத்தில் நம்பர் பிளேட் இல்லாமல் இருத்தல் போன்ற விதிமுறைகளை பின்பற்றாதவர்களுக்கு ரூ.1000க்கு மேல் குடித்துவிட்டு வாகனம் ஓட்டியவர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV: