விருதுநகர் புதிய பேருந்து நிலையத்தை செயல்படுத்துவது தொடர்பாக பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் என்று சாத்தூர் கோட்டாட்சியர் தரப்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

விருதுநகரில் விருதுநகர் சாத்தூர் சாலையில் கடந்த 1992ம் ஆண்டு திறக்கப்பட்ட, காமராஜர் பெயர் கொண்ட புதிய பேருந்து நிலையம் கட்டி முடிக்கப்பட்டு இன்று வரை முப்பது ஆண்டுகளாக செயல்படாமல் உள்ளது.

இதை செயல்படுத்த கோரி மக்கள் தரப்பில் பல ஆண்டுகளாக கோரிக்கை வைக்கப்பட்டு வந்த நிலையில் இன்று வரை இது செயல்பாட்டுக்கு வராமல் இருப்பது மக்களை வேதனைக்குள்ளாக்குகிறது. இதன் விளைவு இன்று வரை மக்கள் அருகில் இருக்கும் மதுரைக்கு செல்ல கூட சிரமப்பட்டு வருகின்றனர்.

உங்கள் நகரத்திலிருந்து(விருதுநகர்)

விருதுநகர்

விருதுநகர்

விருதுநகர் புதிய பேருந்து நிலையத்தை செயல்படுத்த மக்கள் கருத்து தெரிவிக்கலாம்!

பேருந்து நிலையம் இன்று செயல்பாட்டுக்கு வரும் நாளை செயல்பாட்டுக்கு வரும் என்று மக்கள் தொடர்ந்து ஏமாற்றப்பட்டு வரும் நிலையில், மக்கள் இன்று வரை பேருந்து நிலையம் எப்போது செயல்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக்செய்க

அதிகாரிகள் பேருந்து நிலையத்தை ஆய்வு செய்து வருகின்றனர்.

இறுதியாக இது தொடர்பாக பேசிய வருவாய் கோட்டாட்சியர் புதிய பேருந்து நிலையத்தை செயல்படுத்துவது தொடர்பாக பொதுமக்கள் தங்களின் கருத்துகளை எழுத்து மூலமாக கோட்டாட்சியர் அலுவலகத்தில் நேரில் அல்லது அஞ்சல் மூலம் அனுப்பி வைக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:



Source link