நீலகிரியில் ஆஸ்கார் விருது பெற்ற தம்பதியினருக்கு சமூக தன்னார்வலர்கள் கூட்டமைப்பு சார்பாக கௌரவிப்பு விழா நடைபெற்றது.

இந்த வருடம் இந்தியாவை சேர்ந்த 2 படைப்புகளுக்கு ஆஸ்கர் விருது கிடைத்தது. முதலாவது, அதிகம் அறியப்பட்ட ‘ஆர்ஆர்ஆர்’ திரைப்படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடல். இரண்டாவது ‘தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்’ என்ற ஆவண குறும்படத்திற்கு விருது கிடைத்தது.

இதனை தொடர்ந்து நீலகிரி மாவட்ட சமூக தன்னார்வலர்கள் கூட்டமைப்பினுடைய பொதுக்குழு கூட்டமானது முதுமலை தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாம் வளாகத்தில் உள்ள வனத்துறையினர் அரங்கில் நடைபெற்றது.

உங்கள் நகரத்திலிருந்து(நீலகிரி)

இந்த கூட்டத்தில் நீலகிரி மாவட்ட சமூக தன்னார்வலர்கள் கூட்டமைப்பின் நிர்வாகிகள், நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த தன்னார்வ அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் ஆஸ்கர் விருது பெற்ற “தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்” குறும்பட ஆவணப்படத்தில் நடித்த பொம்மன், பெள்ளி தம்பதியினரைப் பாராட்டி மேலும் தமிழக அரசின் அவ்வையார் விருது பெற்ற 80 வயதைக் கடந்த புலவர் கமலம் அவர்களைப் பாராட்டி கௌரவிக்கப்பட்டார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:



Source link