கோவாவில் இருந்து புதுச்சேரிக்கு பீர் பாட்டில்களை ஏற்றிச் சென்ற லாரி, கிருஷ்ணகிரி மாவட்டம், பந்தாரப்பள்ளியில் விபத்துக்குள்ளானது. தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மேம்பாலச் சுவரில் மோதியதால், லாரி கவிழ்ந்தது. இதனால், லாரியில் இருந்த பீர் பாட்டில்கள் சாலையில் விழுந்து உடைந்தன. தகவல் அறிந்து வந்த குருபரப்பள்ளி காவல் துறையினர் மற்றும் டாஸ்மாக் அதிகாரிகள், மீதமிருந்த பீர் பாட்டில்களையும் பொக்லைன் இயந்திரம் மூலம் உடைத்தனர்.

கோடை காலத்தில் ஒரு பீர் கிடைப்பதே அரிதான நிலையில், லாரியின் அருகே உடையாமல் இருந்த பீர் பாட்டிகளை, சிலர் அள்ளிக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். காவல் துறையினர் தடுக்க முயன்றபோதும், ஆளுக்கு ஒரு திசையாக ஓடி தப்பினர்.

உங்கள் நகரத்திலிருந்து(கிருஷ்ணகிரி)

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி

விபத்து குறித்து புகார் எதுவும் வரவில்லை என கூறிய போலீசார், பல லட்சம் ரூபாய் உள்ள பீர் பாட்டில்கள் வீணாகியுள்ளதால், விசாரணை நடந்து வருவதாக கூறப்படுகிறது.

செய்தியாளர் : ஆ.குமரேசன் (கிருஷ்ணகிரி)

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:



Source link