ஜோலார்பேட்டை அருகே ரயிலில் பயணம் செய்த பெண் பயணிகளுக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்த சிஆர்பிஎப் வீரர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கர்நாடகா மாநிலத்திலிருந்து ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினம் வரை செல்லும் விசாகப்பட்டினம் எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவு செய்த பெட்டியில் பெங்களூர் பகுதியைச் சார்ந்த சௌஹான் குமார் மனைவி வாசவி சௌஹான்(38) பயணம் செய்துள்ளார்.
ஜோலார்பேட்டைக்கும் காட்பாடிக்கும் இடையில் ரயில் சென்று கொண்டிருந்தபோது மது போதையில் பயணம் செய்த திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியைச் சேர்ந்த சி.ஆர்.பி.எப் வீரர் சுரேஷ்(வயது 38) என்பவர் அருகில் அமர்ந்து பயணம் செய்தபோது பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது.
உங்கள் நகரத்திலிருந்து(திருப்பத்தூர்)
உடனடியாக டிக்கெட் பரிசோதகரிடம் அந்தப் பெண் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் காட்பாடி ரயில்வே போலீசாரிடம் சுரேசை ஒப்படைத்தனர். சம்பவம் ஜோலார்பேட்டை ரயில்வே எல்லையில் நடந்தது என்பதால் ஜோலார்பேட்டை ரயில்வே போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
சென்னையில் திடீரென இடிந்துவிழுந்த 50 ஆண்டு பழைய கட்டிடம்…
மேலும் சம்பவம் குறித்து ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து சுரேஷை கைது செய்தனர். மேலும் காவல்துறை விசாரணையில் அவர் அதிகளவில் மது போதையில் இருந்ததாகவும் மது போதையில் இது போன்ற சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
செய்தியாளர்: வெங்கடேசன், திருப்பத்தூர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV: