கன்னியாகுமரி மாவட்டம் இரவிபுத்தன்துறை அருகே மீனவர்கள் விரித்த வலையில் சிக்கிய, அரிய வகை உடும்பு சுறாவை பலமணி நேர போராட்டத்திற்கு பின் கடலுக்குள் விடுவித்தனர்.

எடப்பாடு கடற்கரை பகுதியில், மீனவர்கள் கரைமடி வலையை விரித்துவிட்டு, சிறிது நேரத்திற்கு பின், கரைபகுதியில் நின்று வலையை இழுத்துள்ளனர். ஆனால் வலை வழக்கமாக வருவது போல் இல்லாமல் மிகுந்த சிரமமாக உள்ளது. இதனையடுத்து அதிகமான மீனவர்களின் உதவியுடன் மீனவர்கள் வலையை இழுத்து கரைக்கு கொண்டு வந்தனர்.

இதையும் படிக்க : பிடிஆர் ஆடியோ விவகாரம்.. முதல்வர் ஸ்டாலின் அதிரடி பதில்

உங்கள் நகரத்திலிருந்து(கன்னியாகுமரி)

கன்னியாகுமரி

கன்னியாகுமரி

அப்போது அந்த வலையினுள் ராட்சத அரியவகை உடும்பு சுறா மீன் ஒன்று சிக்கியது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த மீனவர்கள் அவசர அவசரமாக வலையை கிழித்து சுறாவை வெளியேற்றினர். இதையடுத்து கடல் அலையில் சிக்கி கடலுக்குள் செல்ல முடியாமல் திணறிய சுறாமீன் பலமணி நேர போராட்டத்திற்கு பிறகு கடலுக்குள் சென்றது.

அதை தொடர்ந்து மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அதே நேரத்தில் இந்த சம்பவத்தால், 30,000 ரூபாய் மதிப்பிலான சேதமடைந்ததாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:



Source link