திருச்சி விமான நிலையத்தில், தள்ளிக் கொண்டு செல்லும் வகையிலான டிராவலர் சூட்கேசின் உள்ளே வைத்து, நூதன முறையில் கடத்தி வரப்பட்ட, 62 லட்ச ரூபாய் மதிப்புடைய, ஒரு கிலோ தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தரும் பயணிகள் மற்றும் அவர்களது உடைமைகளை வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். இந்நிலையில், திருச்சி விமான நிலையத்திற்கு மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து வந்த ஏர் ஈசியா விமான பயணிகள் மற்றும் அவர்களது உடைமைகளை சோதனை செய்தனர்.

அப்போது, ​​ஒரு பெண் பயணி மற்றும் ஆண் பயணி என இருவர் தள்ளிக் கொண்டே வந்த டிராவலர் சூட்கேஸ்களை சந்தேகத்தின் பேரில் சோதனை செய்தனர்.

உங்கள் நகரத்திலிருந்து(திருச்சி)

மேலும் பார்க்க… அடுத்த 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு… வானிலை அலர்ட்..!

அதில், கம்பிகளாக மாற்றி, மறைத்து கடத்தி வரப்பட்ட, 62 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, ஒரு கிலோ கடத்தல் தங்கத்தை, திருச்சி வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும், நூதன முறையில் தங்கத்தை கடத்திய இருவரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:



Source link